அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
கபாலீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம்
Thursday, 28 February 2008
 சென்னை : மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் இன்று சீரும் சிறப்புமாக நடந்தது. இதில் ஏராளமான
பக்தர்கள் கலந்து கொண்டு இறைவனின் அருள் பெற்றனர்.

கடந்த ஆண்டு இடி தாக்கியதில் கபாலீஸ்வரர் கோவில் ராஜகோபுரத்தில் லேசான சேதம் ஏற்பட்டது. இதனைச் சீரமைத்து கும்பாபிஷேகம் நடத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்தது.

இதைத் தொடர்ந்து ரூ. 8 லட்சம் செலவில் ராஜகோபுர திருப்பணிகள் நடந்தது. கோபுரம் முழுவதும் பஞ்சவர்ணம் பூசப்பட்டது.  இன்று கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி கடந்த மூன்று நாட்களாக யாக பூஜைகள் நடந்து வந்தது.

யாக  பூஜைகள் நிறைவடைந்த பின், புனித கலசங்கள் கோயிலைச் சுற்றி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.  கோபுரத்தின் உச்சியில் அமைந்துள்ள 9 கும்ப கலசங்களுக்கு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்பு இன்று காலை 9.00 மணிக்கு புனித நீரை கோபுர கலசங்கள் மீது ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. வேத மந்திரங்கள் ஓத கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது.

கும்பாபிஷேகத்தை நேரில் காண, ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர். பக்தர்கள் மீதும் கும்பாபிஷேக புனித நீர்
தெளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து கபாலீஸ்வரர் மற்றும் கற்பகாம்பாளுக்கு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடத்தப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், அறநிலையத்துறை அமைச்சர் பெரிய கருப்பன், சென்னை மாநகர மேயர் மா.சுப்ரமணியன், அறநிலையத்துறை அமைச்சர் கு.பிச்சாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.





Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code