|
ஆடம்பரம் வேண்டாம் : ரஜினி
|
|
Wednesday, 16 July 2008 |
குசேலன் படம் ரீலிஸ் செய்யப்படும் நாளில் ரசிகர்கள் ஆடம்பர செலவுகள் செய்ய வேண்டாம் என்று ரசிகர்களுக்கு அகில இந்திய ரஜனிகாந்த் தலைமை ரசிகர் மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.
வருகிற ஆகஸ்ட் மாதம் 1ம்தேதி குசேலன் படம் உலகமெங்கும் ரீலிஸ் ஆகவிருக்கிறது. இந்நிலையில் ரசிகர்களுக்கு தலைமை ரசிகர் மன்றம் சார்பில் ஒரு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அதில், குசேலன் படம் ரீலிசின்போது ரசிகர்கள் கொடி, தோரணம், பாலாபிஷேகம் போன்ற எந்த உற்சாக நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது. ஆடம்பர செலவுகளை தவிர்க்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதாம்.
|