அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
கமலுக்கு எஸ்பி டப்பிங்
Wednesday, 13 February 2008
 உலக நாயகன் கமல் 10 வேடங்களில் நடித்து இருக்கும் படம் தசாவதாரம்.  இப்படம் ஏப்ரல் 10ம் தேதி திரைக்கு வருகிறது.

50 கோடி செலவில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதத்திற்கு முன்னரே முடிந்து விட்டது. என்றாலும் போஸ்ட் புரொடக் ஷன் வேலைகள் இன்னும் நடந்து வருகின்றன.
 
தமிழில் ஒரு படத்துக்கு இத்தனை நாட்கள் போஸ்ட் புரொடக் ஷன் வேலைகள் நடப்பது இதுவே முதல்முறை.

ஏப்.10 அன்று தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் 'தசாவதாரம்' வெளியாகிறது. இதில் தமிழ், இந்தி இரு மொழிகளுக்கும் கமல்ஹாசனே டப்பிங் பேசியுள்ளார்.

தெலுங்கில் கமலுக்குப் பதில் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் டப்பிங் குரல் கொடுக்கிறார். தெலுங்கில் மொழி மாற்றம் செய்யப்பட்ட பல கமல் படங்களுக்கு ஏற்கனவே எஸ்.பி.பி. குரல் கொடுத்துள்ளார். அந்த வகையில் இப்படத்திற்கும் எஸ்பி  டப்பிங் செய்திருக்கிறார்.

படம் விருதுகளை குவிக்கும் என எதிர்பார்ப்பதால் தமிழ் மற்றும் இந்தியில் நடித்துள்ள எல்லா நடிகர்களும் சொந்தக் குரலில் பேசியுள்ளனர்.


Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code