அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
டி.ஆரின் 'ஒருதலை ராகம்'
Monday, 10 March 2008

 செட் இல்லாமல் டி.ராஜேந்தர் படமா? நம்பவே முடியாது என்கிறீர்களா? நம்பித்தான் ஆக வேண்டும். இதனை விஜய டி ராஜேந்தரே கூறியிருக்கிறார் என்றால் நம்புவீர்கள் தானே!

பிரமாண்ட செட், அடுக்குமொழி வசனங்கள், அழகு நடையில் ஆறு அல்லது ஏழு பாடல்கள் அங்கும் இங்கும் என பறந்து அடிக்கும் சண்டைகள் இதுதான் டி.ராஜேந்தர் படமாக இருந்தது.

இந்த வழக்கத்தில் இருந்து மாறி முற்றிலும் வித்தியாசமான திரைப்படத்தை தயாராகி வருகிறார் டி. ஆர்.

இந்த மாற்றங்களுக்கெல்லாம் அமீர்தான் காரணமாம். பருத்தி வீரன் பட பாதிப்பில் இருந்து இன்னும் மீண்டு வரவேயில்லையாம் டி.ஆர்.

'ஒருதலை ராகம்' என தனது படத்திற்கு தலைப்பிட்டிருக்கும் டி.ஆர்,  இப்படம் முழுவதையும் கிராமத்து பின்னணியிலேயே உருவாக்கி இருக்கிறாராம்.

படத்தின் ஹீரோ யார் தெரியுமா...? வேற யாரு! நம்ம 'விஜய டி.ஆரு'




Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code