அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
புயலின் கோர தாண்டவம்: 5000 பேர் சாவு
Wednesday, 07 May 2008
 மியான்மரில் பெரும் பகுதியை நர்கீஸ் புயல் நாசமாக்கியுள்ளது.

அங்குள்ள இராவட்டி டெல்டா பகுதி தலைநகரம் யாங்கூன் ஆகியவை மோசமாக பாதிக்கப்பட்டஇடமாகும். அதில் இராவட்டி பகுதி முற்றிலும் நாசமாகி விட்டது.

இதில் அங்கு 22 ஆயிரத்து 500 பேர் பலியாகி உள்ளதாகவும் 41 ஆயிரம் பேரை காணவில்லை என்றும் காணாமல்போனவர்களில் பெரும்பகுதியினர் இறந்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. எனவே சாவு எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டும் என தெரிகிறது.

ஐ.நா. வேண்டுகோள்:

புயலால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மியான்மருக்கு உதவுமாறு உலக நாடுகளுக்கு ஐ.நா. வேண்டுகோள் விடுத்துள்ளது. பிளாஸ்டிக் ஷீட்கள் தண்ணீரை சுத்தமாக்கும் மருந்துகள் சமையல் கருவிகள் கொசு வலைகள் சுகாதார கருவிகள் உணவு ஆகியவை உடனடியாக தேவைப்படுவதாக யாங்கூனில் உள்ள ஐ.நா. அலுவலகம் தெரிவித்துள்ளது.

அங்கு ராணுவஆட்சி நடைபெறுவதால் அந்நாட்டின் மீது அமெரிக்கா பல தடைகளை விதித்து உள்ளது. இந்நிலையில் மியான்மருக்கு உதவ தனது கட்டுப்பர்டடை தளர்த்த தயாராக இருப்பதாக அமெரிக்கா கூறி உள்ளது. மேலும் உடனடியாக உதவியாக அந்நாட்டுக்கு ரூ. 1 கோடி வழங்கி இருக்கிறது.

மியான்மருக்கு இந்தியா உதவ வேண்டும் என்று அமெரிக்க அதிபர் புஷ்சின் மனைவி லாரா புஷ் இதை அறிவித்துள்ளார். இதனால் இந்தியா உதவி செய்தால் அதை மியான்மர் உடனடியாக ஏற்றுக் கொள்ளும் என்று நினைக்கிறேன் என்றும் இந்தியாவுக்கு மிக அருகில் மியான்மர் உள்ளதால் அவர்கள் உடனடியாக உதவ நிறைய வழிகள் உள்ளதாகவும் அவர் கூறினார். முன்னதாகவே மியான்மருக்கு 2 போர்க் கப்பல்களில் உணவு மற்றும் மருந்து பொருட்களை இந்தியா அனுப்பி வைத்து இருக்கிறது.




Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code