அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
இலங்கை திருப்ப கருணா விருப்பம்
Saturday, 24 May 2008
 போலி பாஸ்போர்ட் மூலம் லண்டன் வந்து சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்க முன்னாள் தளபதி கர்ணா தன்னை இலங்கைக்கு திருப்பி அனுப்புமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

விடுதலைப்புலிகளின் இயக்கததின் கிழக்குப் பகுதியின் தளபதியாக இருந்தவர் கர்ணா. இவர் பிரபாகரனுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் 2004 பிரிந்து புதிய பிரிவை உருவாக்கினார்.

இவர் தனது புதுப்பிரிவை உருவாக்கிய கருணா அரசுடன் சேர்ந்து செயல்பட ஆரம்பித்தார். இதனால் விடுதலைப்புலிகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.

கடந்த நம்வம்பர் மாதம் 3ம் தேதி திடீரென லண்டனில் கைது செய்யப்பட்டார் கருணா. அவர் மீது போலிபாஸ்போர்ட் குற்றம் சாட்டப்பட்டு கடந்த 9 மாதங்களாகளுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவர் சிறையில் இருந்தபோது இங்கிலாந்தில் அரசியல் அடைக்கலம் கோரி விண்ணப்பித்திருந்தார். ஆனால் தற்போது தனது நிலையை மாற்றிக் கொண்டு இலங்கைக்கே தன்னைத் திருப்பி அனுப்புமாறு விண்ணப்பித்துள்ளாராம் கருணா.

இந்நிலையில் அவரது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பு முழுக்க முழுக்க பிள்ளையான் வசம் போய்விட்டது. தற்போது அவர் கிழக்கு மாகாண முதல்வராகவும் ஆகிவிட்டார்.

பிள்ளையான் குழுவினர் முற்றிலும் கருணாவுக்கு எதிராக உள்ளனர். அரசும் பிள்ளையான் குழுவுக்கு ஆதரவாக உள்ளது.

எனவே இச்சூழ்நிலையில் கருணாவை இலங்கைக்கு அணுப்புவது குறித்து பரிசீலிப்பதாக தெரிகிறது.



Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code