| 10 லட்சம் இல்லீகல் தொழிலாளர்கள் |
| Friday, 06 June 2008 | ||||
சுற்றுலா விசாவில் வந்து மலேசியாவில் குடியேறும் வெளிநாட்டவர் எண்ணிக்கை 10 லட்சத்தை எட்டியுள்ளதை தொடர்ந்து அந்த நாடு விழித்துக் கொண்டு விட்டது. இதில் சட்டவிரோதமாக குடியேறுபவர்களில் இந்திய வங்க தேசத்தை சேர்ந்த சாதாரண தொழிலாளர்கள் தான் அதிகம் என்று கண்டுபிடித்துள்ளது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் அதிகரிக்க வேண்டும் என்று கடந்தாண்டு உள்ள விதிகளை மலேசியா தளர்த்தியது. யார் வேண்டுமானாலும் மலேசியா வரலாம் ஆனால் விமான நிலையத்தில் வந்திறங்கிய பின் விசா வாங்கி ஊர் சுற்றிப்பார்க்கலாம் என்று சலுகைகளை அறிவித்தது. தற்போது பல நாடுகளிலும் இருந்து சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அதே சமயம் சுற்றுலா பயணிகள் என்ற போர்வையில் சட்டவிரோதமாக மலேசியாவில் ஊடுருவுவோரும் அதிகமாக நுழைந்து விட்டனர். இப்படி சட்டவிரோதமாக நுழைந்தவர்கள் மலேசியாவில் தங்கி விட்டனர். இதனால் மலேசிய அரசுக்கு பெரும் சிக்கல் நிகழ்ந்துள்ளது. தற்போது சட்டவிரோதமாக குடியேறுவோர் எண்ணிக்கையும் அதிகரித்துவருவதால் உள்ளுர்மக்களுக்கு பல வகையிலும் பாதிப்பு ஏற்படுகிறது. மலேசியாவில் 30 லட்சம் வெளிநாட்டவர் பல்வேறு துறைகளிலும் பணியாற்றி வருகின்றனர். பலர் சட்ட விரோமாக ஏஜென்ட்டுகள் மூலம் நாட்டில் நுழைந்து பல நிறுவனங்களிலும் வேலை பார்க்கின்றனர். இதைதடுக்க முதல் கட்டாக சுற்றுலா பயணிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த தாராள விசா சலுகையை ரத்து செய்தது. தற்போது இதைதடுக்க சுற்றுலா பயணிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த தாராள விசா சலுகையை ரத்து செய்தது. இந்தியா மற்றும் வங்க தேசத்தவர் மட்டும் தங்கள் நாட்டில் புறப்படும் போது அங்குள்ள மலேசிய தூதரகத்தில் இரண்டு வார சோஷியல் விசா வாங்கி வரவேண்டும் என்று வரையறுத்துள்ளது.
Write Comment |
||||
மற்றவை
- காங்கிரஸ் வெற்றி: ஸ்ரீலங்கா மகிழ்ச்சி!
- சார்க் மாநாட்டின்போது போர் நிறுத்தம்
- நேபாளத்தில் முதல் ஜனாதிபதி தேர்தல்
- அணுசக்தி ஒப்பந்தம்: சீனா எதிர்க்காது!
- 10 டாலர் சரிந்தது கச்சா எண்ணெய்!!
- கருணா அழைக்கப்பட்டதன் பின்னணி என்ன?
- ஒபாமா செல்வாக்கு திடீர் சரிவு
- மகிந்த ராஜபக்சே இன்று இந்தியா வருகை
- புஷ்-மன்மோகன் 50 நிமிட பேச்சு
- சீன அதிபருடன் மன்மோகன் சந்திப்பு
பகுதி:: சர்வதேசம்

சுற்றுலா விசாவில் வந்து மலேசியாவில் குடியேறும் வெளிநாட்டவர் எண்ணிக்கை 10 லட்சத்தை எட்டியுள்ளதை தொடர்ந்து அந்த நாடு விழித்துக் கொண்டு விட்டது. இதில் சட்டவிரோதமாக குடியேறுபவர்களில் இந்திய வங்க தேசத்தை சேர்ந்த சாதாரண தொழிலாளர்கள் தான் அதிகம் என்று கண்டுபிடித்துள்ளது. 


