அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
10 லட்சம் இல்லீகல் தொழிலாளர்கள்
Friday, 06 June 2008
 சுற்றுலா விசாவில் வந்து மலேசியாவில் குடியேறும் வெளிநாட்டவர் எண்ணிக்கை 10 லட்சத்தை எட்டியுள்ளதை தொடர்ந்து அந்த நாடு விழித்துக் கொண்டு விட்டது. இதில் சட்டவிரோதமாக குடியேறுபவர்களில் இந்திய வங்க தேசத்தை சேர்ந்த சாதாரண தொழிலாளர்கள் தான் அதிகம் என்று கண்டுபிடித்துள்ளது.

இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் அதிகரிக்க வேண்டும் என்று கடந்தாண்டு உள்ள விதிகளை மலேசியா தளர்த்தியது. யார் வேண்டுமானாலும் மலேசியா வரலாம் ஆனால் விமான நிலையத்தில் வந்திறங்கிய பின் விசா வாங்கி ஊர் சுற்றிப்பார்க்கலாம் என்று சலுகைகளை அறிவித்தது.

தற்போது பல நாடுகளிலும் இருந்து சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அதே சமயம் சுற்றுலா பயணிகள் என்ற போர்வையில் சட்டவிரோதமாக மலேசியாவில் ஊடுருவுவோரும் அதிகமாக நுழைந்து விட்டனர். இப்படி சட்டவிரோதமாக நுழைந்தவர்கள் மலேசியாவில் தங்கி விட்டனர். இதனால் மலேசிய அரசுக்கு பெரும் சிக்கல் நிகழ்ந்துள்ளது. தற்போது சட்டவிரோதமாக குடியேறுவோர் எண்ணிக்கையும் அதிகரித்துவருவதால் உள்ளுர்மக்களுக்கு பல வகையிலும் பாதிப்பு ஏற்படுகிறது. மலேசியாவில் 30 லட்சம் வெளிநாட்டவர் பல்வேறு துறைகளிலும் பணியாற்றி வருகின்றனர். பலர் சட்ட விரோமாக ஏஜென்ட்டுகள் மூலம் நாட்டில் நுழைந்து பல நிறுவனங்களிலும் வேலை பார்க்கின்றனர்.

இதைதடுக்க முதல் கட்டாக சுற்றுலா பயணிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த தாராள விசா சலுகையை ரத்து செய்தது. தற்போது இதைதடுக்க சுற்றுலா பயணிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த தாராள விசா சலுகையை ரத்து செய்தது. இந்தியா மற்றும் வங்க தேசத்தவர் மட்டும் தங்கள் நாட்டில் புறப்படும் போது அங்குள்ள மலேசிய தூதரகத்தில் இரண்டு வார சோஷியல் விசா வாங்கி வரவேண்டும் என்று வரையறுத்துள்ளது.



Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code