அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
கச்சா எண்ணை: 144 டாலர்
Wednesday, 02 July 2008
 கச்சா எண்ணையின் விலை மேலும் உயர்ந்துள்ளது. ஒரு பீப்பாயின் விலை தற்போது 144 டாலராக உயர்ந்துள்ளது. இதனால் எண்ணை வாங்கும் நாடுகள் மேலும் கவலையில் மூழ்கியுள்ளன.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை கடுமையாக உயர்ந்து வருவதால் எண்ணை வாங்கும் நாடுகள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. பல நாடுகளில் பெட்ரோல் டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் நேற்று கச்சா எண்ணையின் விலை ஒரு பீப்பாய் 144 டாலராக உயர்தது. 2 நாட்களுக்கு முன்பு வரை இது 140 டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனால் கச்சா எண்ணையின் இந்த உயர்வால் பெட்ரோலியப் பொருட்களின் விலையை மேலும் உயர்த்த வேண்டிய இக்கட்டான நிலைகளுக்கு உலக நாடுகள் தள்ளப்பட்டுள்ளன.

கச்சா எண்ணெயின் விலை இன்னும் சில வாரங்களில் பீப்பாய்க்கு 170 டாலரைத் தொடும் என சர்வதேச நிதி நிறுவனங்கள் கூறியுள்ளன.


Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code