அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
கவலையில் தங்கர்பச்சான்
Thursday, 13 March 2008
 தங்கர் பச்சான் இயக்கிய 'ஒன்பது ரூபாய் நோட்டு' நூறு நாட்களை தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. இதனால், மனிதர் மகா சந்தோஷத்தில் இருப்பார் என்று பார்த்தால்  சோகமே உருவாக இருக்கிறார்.

ஏனென்றால்,  இப்பட வெற்றி விழாவை நன்றாக கொண்டாட முடியுமே முடியாதோ என்ற பயம்தான். இந்த விழாவில் அரசியல் சாயம் ஏதும் பூசப்பட்டு விடக் கூடாது என்ற வருத்தமும்தான்.

விஷயம் இதுதான். 'ஒன்பது ரூபாய் நோட்டு' வெற்றி விழாவை சிறப்பாக கொண்டாட முடிவு செய்த தங்கர், முதல்வரை விழாவிற்கு அழைத்துள்ளார். இதற்கு இசைவு தெரிவித்த முதல்வர் இம்மாத இறுதியில் வைத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டுள்ளார். இவ்விழாவிற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினி ஆகியோருக்கும் அழைப்பு விடுத்துள்ளார் இயக்குனர்.

ராஜ்யசபா தேர்தல் விவகாரத்தில் திமுக-பாமக எதிரும் புதிருமாக இருப்பதால், குறிப்பிட்டபடி விழா நடக்குமா? அப்படியே நடந்தால் அங்கு காரசாரமான அரசியல் விவாதங்கள் அரங்கேறுமா என்ற அச்சத்தில் உள்ளார் தங்கர்.



Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code