| காந்திஜி சொன்ன காதல்... |
| Wednesday, 12 March 2008 | ||||
காதல் பற்றி ஒவ்வொருவரும் ஒரு கருத்தைச் சொல்ல, தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள் காதல் என்பது தவறான ஒரு உணர்வு கிடையாது, என்றெ கூறியிருக்கிறார்.ஆண்-பெண் இடையே ஏற்படும் காதல் மிக உயர்ந்தது. மென்னையானது. ஆகவே, காதலிக்க ஆணோ, பெண்ணோ வெட்கப்பட வேண்டியதில்லை. ஏனெனில் படைப்புத் தொழிலுக்கு அதுதான் ஆதாரம். எங்கே உண்மைக் காதல் இல்லையோ, அங்கே இதயப் பிணைப்பு இருக்காது. காதல் தூய்மையானதாக இருக்குமானால் அது மிருக இச்சையைக் கடந்து தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொள்ளும். சிற்றின்பம் என்பது காதலைப் பெருக்கும் கருவியல்ல. காதலைக் கட்டிக் காக்கும் சக்திகூட அதற்குக் கிடையாது. மிருக இச்சையை அடிப்படையாகக் கொண்ட காதல் சுய நலத்தில் ஏற்படக் கூடியது. ஆகவே, விரைவில் அழியும். ஆனால், தன்னடக்கம் உள்ளவர்களிடம் காதல் பெருகுவதை நான் கண்டிருக்கிறேன் என்கிறார் அண்ணல் காந்தியடிகள். கன்னியமான காதலுக்கு காந்தியே பச்சைக் கொடி இருக்கிறார். பிறகென்ன! கன்னியரே காளையரே காதல் கொள்ளுங்கள்! காம நெடி இன்றி.
Write Comment |
||||

காதல் பற்றி ஒவ்வொருவரும் ஒரு கருத்தைச் சொல்ல, தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள் காதல் என்பது தவறான ஒரு உணர்வு கிடையாது, என்றெ கூறியிருக்கிறார்.

