| டெல்லியில் குஜ்ஜார் இன மக்கள் பந்த் |
| Thursday, 29 May 2008 | ||||
ஜெய்பூர் மே 29:ராஜஸ்தான் மாநிலத்தில் பழங்குடியினப் பட்டியலில் சேர்க்கக்கோரி குஜ்ஜார்கள் நடத்தி வரும் போராட்டம் நேற்றோடு ஆறாவது நாளை எட்டியுள்ளது. குஜ்ஜார்கள் நடத்தி வரும் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போலீஸ் துப்பாக்கிச் சூடு மற்றும் வன்முறை சம்பவங்களில் 38 பேர் பலியானார்கள். பலர் படுகாயமடைந்துள்ளனர். தற்போது தேசிய தலைநகர் டெல்லிக்கும் பரவி விட்டது. டெல்லி அருகே குர்கான் பகுதியில் நேற்ற சாலைகளில் டயர்களை எரித்தனர். கடைகளும் அடைக்கப்பட்டன. இதனால் அண்டை மாநிலங்களில் இருந்து டெல்லிக்கு வரும் பெரும்பாலான சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுதொடர்பாக தலைநகர் டெல்லி முழுவதும் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குஜ்ஜார் இனத்தவர் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு போடப்பட்டு உள்ளது மற்றும் டெல்லி மற்றும் உத்தரபிரதேசம் அரியானா மாநிலங்களையும் மத்திய அரசு எச்சரித்து இருக்கிறது. இது குறித்து குஜ்ஜார் இன தலைவர் பைன்சாலா கூறுகையில் காலதாமதம் ஏற்படுத்தாமல் குஜ்ஜார் இனத்தை சேர்ப்பது மட்டுமே போராட்டத்துக்கு முடிவாக அமையும் என்றார்.
Write Comment |
||||
மற்றவை
- பிரதமருடன் புஷ் தொலைபேசியில் பேச்சு
- சோம்நாத் சபாநாயகராக நீடிக்க காங். ஆதரவு
- மன்மோகன் அரசு வெற்றி பெற்றது!
- இந்திய-அமெரிக்க ஒப்பந்தமில்லை: அத்வானி
- ஆதரவு-266 எதிர்ப்பு-265: ஜெயிப்பது யார்?
- நம்பிக்கை ஓட்டெடுப்பு: டெல்லியில் எம்.பி.க்கள்
- பா.ஜ.க.-காங். எம்.பிக்களுக்கு வலை
- எம்பிக்களுக்கு ரூ. 30 கோடி-மாயாவதி பேரம்?
- மன்மோகன் சிங்குடன் முகேஷ் சந்திப்பு
- நம்பிக்கை ஓட்டெடுப்பு:22ம் தேதி நடைபெறும்
பகுதி:: தேசியம்

ஜெய்பூர் மே 29:


