அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்வு?
Friday, 30 May 2008
 சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 135 டாலராக உயர்ந்துவிட்ட நிலையில் விலையை உயர்த்தாமல் விற்வு ரும் மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்களுக்கு தினசரி ரூ. 580 கோடி நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. இந்த ஆண்டில் மட்டும் ரூ. 2.25 லட்சம் கோடியை இழந்துவிட்டது.

பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 16ம் டீசல் விலையை ரூ. 10ம் உயர்த்த வேண்டும் என்ற எண்ணெய் நிறுவனங்களின் கோரிக்கை ஏற்கப்படவில்லை. முன்னதாக பெட்ரோல் விலையை உயர்த்தாமலேயே சிக்கலை தீர்க்க முடியுமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது பெட்ரோலியப் பொருட்கள் மீதான சுங்க வரியை நிமியமைச்சகம் ரத்து செய்தால் விலையை ஏற்ற வேண்டிய அவசியம் இல்லை என பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து வரியை முற்றிலும் குறைக்காமல் ஓரளவுக்குக் குறைப்பது எனவும் எண்ணெய் நிறுவனங்களின் நஷ்டத்தை சிறிது குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 4ம் டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 2 ம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மேலும் இவற்றின் மீதான சுங்க வரியைக் குறைக்கவும் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஒப்புக் கொண்டுள்ளார்.





Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code