அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
எடியூரப்பா 29 அமைச்சர்களுடன் பதவியேற்பு
Saturday, 31 May 2008
 பெங்களுர் மே 31:

கர்நாடகாவில் பா.ஜ. அரசு நேற்று பதவியேற்றது. முதல்வர் எடியூரப்பாவுடன் 29 அமைச்சர்கள் பதவியேற்றனர்.

சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் உள்ள 224 இடங்களில் 110 இடங்களை கைப்பற்றிய பா.ஜ. 6 சுயேச்சைகளின் ஆதரவுடன் அரசு அகைம்க பெரும்பான்மை பலத்தை பெற்றது. இதைத்தொடர்ந்து பா.. அமைசரவை நேற்ற பிற்பகல் 1.50 க்கு பதவியேற்றது.

இவ்விழா பெங்களுர் விதான்சவுதா எதிரே அமைக்கப்பட்ட பிரம்மாண்ட மேடையில் நடைபெற்றது. மாநிலத்தின் 25வது முதல்வராக எடியூரப்பா பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் ராமேஷ்வர் தாக்கூர் பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

5 சுயேச்சைகளுக்கு பதிவ: எடியூரப்பாவைத் தொடர்ந்து 29 அமைச்சர்கள் பதவியேற்றனர். பா.ஜ. ஆட்சி அமைக்க ஆதரவளித்த 6 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களில் 5 பேருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது.



Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code