| வங்கிகள் தனியார் மயமாக்கப்படாது: |
| Monday, 02 June 2008 | ||||
சென்னை ஜுன் 2:பொது உடமை வங்கிகள் தனியார் மயமாக்கப்படாது என்று மத்திய மந்திரி ப.சிதம்பரம் உறுதி அளித்தார். யூகோ வங்கியின் அகில இந்திய ஊழியர்களின் கூட்டமைபப்பின் 13வது மாநாடு சென்னை அண்ணாநகரில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு ஷியாம் கோபால் தாஸ் தலைமை தாங்கினார். மத்திய மந்திரி ப.சிதம்பரம் கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து பேசியதாவது: 1997ல் யூகோ வங்கி ரூ. 211 கோடி நஷ்டத்தில் இயங்கியது. தற்போது அது ரூ. 412 கோடி நிகர லாபம் எட்டியுள்ளது. 1961 கிளைகளுடன் விளங்குகிறது. மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க 2003-04ம் ஆண்டு ரூ. 7000 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த ஆண்டு ரூ. 34000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் எந்த ஒரு மாணவருக்கும் கல்விக் கடன் மறுக்கப்படாது. பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கப்படாது என்று உறுதியளிக்கிறேன். ஸ்டேட் வங்கிக்கு நன்றாக இயங்க ரூ. 10000 கோடியை அரசு வழங்கி உள்ளது. அதுபோல யூகோ வங்கிக்கும் தேவைப்பட்டால் வழங்கும்.
Write Comment |
||||
மற்றவை
- பிரதமருடன் புஷ் தொலைபேசியில் பேச்சு
- சோம்நாத் சபாநாயகராக நீடிக்க காங். ஆதரவு
- மன்மோகன் அரசு வெற்றி பெற்றது!
- இந்திய-அமெரிக்க ஒப்பந்தமில்லை: அத்வானி
- ஆதரவு-266 எதிர்ப்பு-265: ஜெயிப்பது யார்?
- நம்பிக்கை ஓட்டெடுப்பு: டெல்லியில் எம்.பி.க்கள்
- பா.ஜ.க.-காங். எம்.பிக்களுக்கு வலை
- எம்பிக்களுக்கு ரூ. 30 கோடி-மாயாவதி பேரம்?
- மன்மோகன் சிங்குடன் முகேஷ் சந்திப்பு
- நம்பிக்கை ஓட்டெடுப்பு:22ம் தேதி நடைபெறும்
பகுதி:: தேசியம்

சென்னை ஜுன் 2:


