அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
அனைத்துக் கட்சி கூட்டம்: எதியூரப்பா
Tuesday, 03 June 2008
 புதுடெல்லி ஜுன் 3:

ஒகேனக்கல் மற்றும் காவிரிப் பிரச்சினை தொடர்பாக விரைவில் அனைத்துக் கட்சிகளையும் கூட்டப்படும் என்று கர்நாடக முதல்வர் எதியூரப்பா தெரிவித்துள்ளார்.

டெல்லி வந்துள்ள எதியூரப்பா செய்தியாளர்களிடையே கூறுகையில் கர்நாடகத்தின் கலாச்சாரம் மொழி நிலம் நீர்வளம் ஆகியவற்றில் எந்த வகையிலும் சமரசத்திற்கு இடமில்லை. இது எங்களுக்கு மிகவும் முக்கியமானது. கர்நாடக மாநில நலன்கள் ஒருபோதும் விட்டக் கொடுக்கப்பட மாட்டாது. அனைத்துப் பிரச்சனைகளிலும் கர்நாடகத்திற்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் தீர்வு காணப்படும் என்றார். இது தொடர்பாக யாருடனும் மோதல் போக்கில் ஈடுபடமாட்டேன்.

இந்த ஆட்சியில் ஊழல் லஞ்சம் போன்றவை ஒழிக்க முழுமுணைப்போடு ஈடுபடுவேன். இந்தியாவிலேயே முழுமுதன்மையான மாநிலமாக பாடுபடுவேன்.

வளர்ச்சியடைந்த வலுவான உறுதியான கர்நாடகத்தை உருவாக்க ஒருமித்த கருத்தின் அடிப்படையில்தான் எனது அரசின் முடிவுகள் இருக்கும் என்றார். முக்கியமாக பெங்களுர் நகர வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும் பெங்களுர் நகரை சர்வதேச நகரமாக மாற்றுவோம். உலகத் தரம் வாய்ந்த வசதிகள் இங்கு ஏற்படுத்தப்படும் என்றார் எதியூரப்பா.


Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code