| ரெயில் கட்டணம் உயராது: லாலு |
| Friday, 06 June 2008 | ||||
புதுடெல்லி ஜுன் 6:டீசல் விலை உயர்ந்துள்ள போதும் ரெயில் பயணிகளுக்கு கட்டணமோ சரக்கு கட்டணமோ உயராது என்று ரெயில்வே மந்திரி லாலு பிரசாத் அறிவித்துள்ளார். ரெயில்வே துறை ஆண்டுதோறும் 227 கோடி லிட்டர் டீசலை பயன்படுத்துகிறது. தற்போது டீசல் லிட்டருக்கு ரூ. 3 உயர்த்தப்பட்டு இருப்பதால் ரெயில்வே துறைக்கு ஓராண்டுக்கு ரூ. 681 கோடி கூடுதல் செலவாகும் இதனால் இந்த நிதியாண்டில் அடுத்து வரும் 10 மாதங்களில் ரூ. 560 கோடி செலவு ஏற்படும். இதன்காரணமாக இந்த உயர்வின் பாதிப்பை பயணிகள் மீதோ அல்லது சரக்கு போக்குவரத்து சேவையை பயன்படுத்துபவர்கள் மீதோ சுமத்த ரெயில்வே அரசு விரும்பவில்லை எனவும் இச்சூழ்நிலையை சமாளிக்க சரக்கின் அளவை அதிகரிப்பதன் மூலமும் உற்பத்தி திறன் மூலமும் இந்த செலவை சரிக்கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது இவ்வாறு லாலு கூறியுள்ளார்.
Write Comment |
||||
மற்றவை
- பிரதமருடன் புஷ் தொலைபேசியில் பேச்சு
- சோம்நாத் சபாநாயகராக நீடிக்க காங். ஆதரவு
- மன்மோகன் அரசு வெற்றி பெற்றது!
- இந்திய-அமெரிக்க ஒப்பந்தமில்லை: அத்வானி
- ஆதரவு-266 எதிர்ப்பு-265: ஜெயிப்பது யார்?
- நம்பிக்கை ஓட்டெடுப்பு: டெல்லியில் எம்.பி.க்கள்
- பா.ஜ.க.-காங். எம்.பிக்களுக்கு வலை
- எம்பிக்களுக்கு ரூ. 30 கோடி-மாயாவதி பேரம்?
- மன்மோகன் சிங்குடன் முகேஷ் சந்திப்பு
- நம்பிக்கை ஓட்டெடுப்பு:22ம் தேதி நடைபெறும்
பகுதி:: தேசியம்

புதுடெல்லி ஜுன் 6:


