| முலாயம்சிங் - மாயாவதி சந்திப்பு |
| Saturday, 07 June 2008 | ||||
சமாஜ்வாடி கட்சித்தலைவர் முலாயம் சிங்கும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியும் 13 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்தனர்.இந்த அரிய சந்திப்பு லக்னோ நகரில் உள்ள முதல்-மந்திரி மாயாவதியின் அரசாங்க வீட்டில் நேற்று நடந்தது. உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியின் ஆட்சியை முறியடித்து மாயாவதியின் ஆட்சி தற்போது நடந்து வருகிறது. மாயாவதியின் வீட்டில் நடந்த மாநில மனித உரிமை கமிஷன் கூட்டத்தில் மாயாவதி முலாயம்சிங் மற்றும் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். 45 நிமிடம் நடந்த இந்த கூட்டத்தில் சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் நீதிபதி எச்.கே.சீமா மனித உரிமை கமிஷன் தலைவராகவும் அலகாபாத் ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி விஷ்ணு சகாய் ஆஷா திவாரி ஆகிய 2 பேர் உறுப்பினர்களாகவும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
Write Comment |
||||
மற்றவை
- பிரதமருடன் புஷ் தொலைபேசியில் பேச்சு
- சோம்நாத் சபாநாயகராக நீடிக்க காங். ஆதரவு
- மன்மோகன் அரசு வெற்றி பெற்றது!
- இந்திய-அமெரிக்க ஒப்பந்தமில்லை: அத்வானி
- ஆதரவு-266 எதிர்ப்பு-265: ஜெயிப்பது யார்?
- நம்பிக்கை ஓட்டெடுப்பு: டெல்லியில் எம்.பி.க்கள்
- பா.ஜ.க.-காங். எம்.பிக்களுக்கு வலை
- எம்பிக்களுக்கு ரூ. 30 கோடி-மாயாவதி பேரம்?
- மன்மோகன் சிங்குடன் முகேஷ் சந்திப்பு
- நம்பிக்கை ஓட்டெடுப்பு:22ம் தேதி நடைபெறும்
பகுதி:: தேசியம்

சமாஜ்வாடி கட்சித்தலைவர் முலாயம் சிங்கும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியும் 13 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்தனர்.


