அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
ஜுலை 2 முதல் லாரிகள் ஸ்டிரைக்
Monday, 09 June 2008
 டீசல் விலை உயர்வை கண்டித்து ஜுலை 2ம் தேதி இந்தியா முழுவதும் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என்று முடிவெடுத்துள்ளனர்.

இது குறித்து அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் அமைப்பின் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்குப் பின்னர் அதன் தலைவர் தரன்சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில் டீசல் மீதான வரியை ரத்து செய்ய வேண்டும். சுங்க வரியை நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மத்திய அரசிடம் மனு கொடுக்கவுள்ளோம்.

எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற ஜுன் 30ம் தேதி வரை அவகாசம் தருகிறோம். எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ஜுலை 1ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம் என்றார் சரன்சிங்.

லாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் விலைவாசியும் அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறையும் மிகவும் மோசமாகும் நிலை ஏற்படும்.


Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code