| குஜார்களின் 2 புதிய நிபந்தனைகள் |
| Wednesday, 11 June 2008 | ||||
பழங்குடியின பட்டியலில் சேர்க்க கோரி ராஜஸ்தானில் குஜ்ஜார் இனத்தினர் கடந்த 15 நாட்களாக போராட்டம்நடத்தி வருகின்றனர். இதனால் மாநிலத்தில் பஸ் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 40க்கும் அதிகமானோர் இறந்தனர். அண்டை மாநிலங்களுக்கும் இந்தப் போராட்டம் நடந்தது. குஜார்களின் போராட்டம் முடிவுக்கு கொண்டு பேச்சுவார்த்தை நடத்த ராஜஸ்தான் அரசு குஜ்ஜார் பழங்குடியினருக்கு அழைபபு விடுத்தது. இதனை நிராகரித்த குஜ்ஜார் இன தலைவர் பைன்சாலா பின்பு பயானாவில்தான் பேச்சு நடத்த வேண்டும் என்று கூறி சம்மதித்தார். பேச்சுவார்த்தையில் பங்கேற்க குஜ்ஜார்கள் 2 புதிய நிபந்தனைகளை விதித்துள்ளனர். நேற்று முன்தினம் குஜ்ஜார் இன பிரதிநிதிகளுடன் முதல் சுற்று பேச்சுவார்தை நடத்தியது. இதில் ராஜஸ்தான் அமைச்சர்கள் 2 பேர் பங்கேற்றனர். அடுத்த சுற்று பேச்சுவார்த்தை ஜெய்ப்பூரில் நடக்கும் என்றும் இதில் பங்கேற்போம் என்று அறிவித்த குஜ்ஜார் தலைவர் பைன்சாலா இதுவரை நடத்தி வந்த போராட்டங்கள் நிறுத்தப்படுவதாகவும் அறிவித்தார். இந்நிலையில் 2ம் சுற்று பேச்சுவார்த்தை பங்கேற்க 2 புதிய நிபந்தனைகளை பைன்சாலா விதித்துள்ளார். குஜ்ஜார்கள் நடத்திய போராட்டத்தில் கைது செய்யப்பட்ட பெண்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். 20 பேர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள கொலை வழக்கை வாபஸ் பெற வேண்டும் அப்போதுதான் 2வது சுற்று பேச்சுவார்த்தையில் பங்கேற்க முடியும் என்று பைன்சாலா தெரிவித்துள்ளதாக தெரிகிறது. இதற்கிடையில் ஜெய்ப்பூரில் 2வது சுற்று பேச்சுவார்த்தைக்கு பிரதிநிதிகளை அனுப்புமாறு பைன்சாலாவுக்கு மாநில அரசு கடிதம் அனுப்பியுள்ளது.
Write Comment |
||||
மற்றவை
- பிரதமருடன் புஷ் தொலைபேசியில் பேச்சு
- சோம்நாத் சபாநாயகராக நீடிக்க காங். ஆதரவு
- மன்மோகன் அரசு வெற்றி பெற்றது!
- இந்திய-அமெரிக்க ஒப்பந்தமில்லை: அத்வானி
- ஆதரவு-266 எதிர்ப்பு-265: ஜெயிப்பது யார்?
- நம்பிக்கை ஓட்டெடுப்பு: டெல்லியில் எம்.பி.க்கள்
- பா.ஜ.க.-காங். எம்.பிக்களுக்கு வலை
- எம்பிக்களுக்கு ரூ. 30 கோடி-மாயாவதி பேரம்?
- மன்மோகன் சிங்குடன் முகேஷ் சந்திப்பு
- நம்பிக்கை ஓட்டெடுப்பு:22ம் தேதி நடைபெறும்
பகுதி:: தேசியம்

பழங்குடியின பட்டியலில் சேர்க்க கோரி ராஜஸ்தானில் குஜ்ஜார் இனத்தினர் கடந்த 15 நாட்களாக போராட்டம்நடத்தி வருகின்றனர். இதனால் மாநிலத்தில் பஸ் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 40க்கும் அதிகமானோர் இறந்தனர். அண்டை மாநிலங்களுக்கும் இந்தப் போராட்டம் நடந்தது. 


