அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேறும்
Thursday, 12 June 2008
 அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேறும் என்று பிரதமர் மன்மோகன் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுடன் இந்தியா செய்து கொண்டுள்ள அணுசக்தி ஒப்பந்தத்துக்கு மத்திய அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வரும் இடதுசாரி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. இதனால் இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

முன்னேற்றம் காண

இந்தியா அமெரிக்காவுடன் செய்து கொண்டுள்ள அணுசக்தி ஒப்பந்தம் அந்த நாட்டுடன் மட்டும் இன்றி ரஷியா பிரான்சு போன்ற பிற அணுசக்தி நாடுகளுடனும் புதிய ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்கும். இவை இந்தியாவின் நலனை பாதுகாக்கும் வகையிலும் அமையும். தடைகளையும் முட்டுக்கட்டைகளையும்தாண்டி வரும் மாதங்களில் இந்த ஒப்பந்த்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கை தெரிவித்தார்.

தற்போது பெட்ரோலிய பொருட்களின் தேவை அதிகரித்து இருப்பதாலும் இதனால் புதிய எண்ணை வளங்களை கண்டு அறிய வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருப்பதாகவும் உலகில் அதிகார போட்டியில் எண்ணை வளமும் முக்கிய பங்கு வகிப்பதாக இருக்கும் என்று மன்மோகன் சிங் கூறினார்.



Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code