அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
குவின்டாலுக்கு ரூ.850: அரசு அறிவிப்பு
Friday, 13 June 2008
 நெல் கொள்முதல் விலையை குவின்டாலுக்கு 105 ரூபாய் உயர்த்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

முந்தைய ஆண்டுகளில் நெல் கோதுமை இரண்டுக்கும் சமமான கொள்முதல் விலையையே அரசு நிர்ணயித்தது.

கடந்த ஆண்டு கோதுமைக்கான கொள்முதல் விலையை 1000 ரூபாயாக மத்திய அரசு நிர்ணயம் செய்தது. இதனால் கோதுமைக்கு கூடுதலாகவும் நெல்லுக்கு குறைவாகவும் கொள்முதல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது இதனால் நெல் அதிகம் விளையும் மாநிலங்களில் உள்ள விவசாயிகள் அதிருப்திக்குள்ளாயினர். மேலும் பல்வேறு போராட்டங்களில் டுபட்டனர்.

இதைத்தொடர்ந்து தமிழகத்தில் சாதாரண நெல்லுக்கு குவின்டாலுக்கு 1500 ரூபாயாக உயர்த்த தமிழக விவசாயிகள் கோரி வந்தனர்.

இந்நிலையில் நெல் கொள்முதல் விலையை குவின்டாலுக்கு ரூ. 105 உயர்த்தியுள்ளதன் மூலம் நெல் கொள்முதல் விலை குவின்டாலுக்கு ரூபாய் 850 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஈ




Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code