அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
பிரதமருக்கு கண் அறுவை சிகிச்சை
Monday, 16 June 2008
 புதுடெல்லி ஜுன் 16:

பிரதமர் மன்மோகன் சிங்குக்கு டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று கண்புரை அறுவை சிகிச்சை நடைபெற்றது.

காட்ராக்ட்

பிரதமர் மன்மோகன் சிங்குக்கு 75 வயது ஆகிறது. சில மாதங்களுக்கு முன் எய்ம்ஸ் மருத்துவமனையில் புரோட்டஸ்ட் சுரப்பி அறுவை சிகிச்சை நடைபெற்றது. இந்த நிலையில் அவருடைய கண்களில் கண்புரை பிரச்சனை இருந்தது. இதையடுத்து கடந்த மாதம் 25ம் தேதி அன்று அவருடைய வலது கண்ல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. எய்ம்ஸ் மருத்துவமனயைல் நட்நத அந்த அறுவை சிகிச்சையின்போது அவருடைய வலது கண்ணில் இருந்து கண்புரை அகற்றப்பட்டு லென்ஸ் பொருத்தப்பட்டது.

இந்நிலையில் அவருடைய இடது கண்ணில் நேற்ற காலை அறுவை சிகிச்சை நடைபெற்றது. எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள ராஜேந்திர பிரசாத் மையத்தில் நடந்த அறுவை சிகிச்சையில் அவருடைய இடது கண்ணில் இருந்த கண்புரை அகற்றப்பட்டு லென்ஸ் பொருத்தப்பட்டது.

மீண்டும் திங்கட்கிழமை அவருடைய வழக்கமான பணிகளை அவர் மேற்கொள்ளலாம் என்றும் என்றும் டாக்டர்கள் கூறினர்.


Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code