அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
ஐ.மு.கூ.-இடதுசாரிகள்: முக்கிய ஆலோசனை
Wednesday, 25 June 2008
 புதுடெல்லி ஜுன் 25:

அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி இடதுசாரிகளின் ஒருங்கிணைப்புக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் உடனபாடு ஏற்படுமா அல்லது இடதுசாரிகள் மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுமா என்பது இன்று இறுதியாக தெரியவரும்.

அணுசக்தி ஒப்பந்தம் இடதுசாரிகள் மற்றும் மத்திய அரசுக்கும் இடையே உள்ள விவகாரத்தில் இன்று நடைபெறவுள்ள கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.

ஒப்பந்தம் கண்டிப்பாக அமல்படுத்தியே ஆக வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் தீவிரமாக உள்ளார். ஆனால் ஒப்பந்தத்தை அப்படியே கைவிட வேண்டும் என இடதுசாரிகள் பிடிவாதமாக உள்ளனர். இவர்களுக்கு இடையே சிக்கித் தவிப்பது இப்போது காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள்தான்.

காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் மற்றும் இடதுசாரிகள் தற்போது தேர்தலை விரும்பவில்லை. இதையடுத்து நேற்று நடைபெற்ற மத்திய அரசு சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. சமரசத் திட்டத்தை இடதுசாரிகள் நிராகரித்துவிட்டனர்.

இப்படி அனைத்து வகையிலும் இன்னும் இழுபறி நீடித்து வரும் நிலையில் இன்ற ஒருங்கிணைப்புக் கூட்டம் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 5 மணிக்கு வெளியுறவுத் துறைஅமைச்சர் பிரணாப் முகர்ஜி இல்லத்தில் இக்கூட்டம் நடைபெறும்.

இன்று நடைபெறும் இன்றைய கூட்டம் நடக்குமா நடந்தாலும் அதில் உடன்பாடு ஏற்படுமா ஏற்படாவிட்டால் இடதுசாரிகள் என்ன முடிவு எடுக்கப்படும் என்று மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.


Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code