அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
சோனியாவுடன் பிரதமர் அவசர ஆலோசனை
Thursday, 26 June 2008
 அணுசக்தி ஒப்பந்தம் பற்றி சோனியாகாந்தியுடன் பிரதமர் மன்மோகன் சிங் அவசர ஆலோசனை நடத்தினார்.

நேற்று நடந்த ஐ.மு. கூட்டணி-இடதுசாரி கட்சிகள் கமிட்டி கூட்டத்தில் அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக எந்த முடிவும் ஏற்படவில்லை. இக்கூட்டம் முடிந்ததும் பிரதமர் மன்மோகன் சிங்கும் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தியும் காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் அமெரிக்கா உடனான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சனைகள் பற்றி ஆலோசிக்கப்பட்டது. அப்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணி - இடதுசாரிகள் கமிட்டியில் நடைபெற்ற விவாதங்கள் பற்றி ஏ.கே. அந்தோணியும் பிரணாப் முகர்ஜியும் எடுத்துக் கூறியதாக தெரிகிறது.

இதற்கிடையே மத்திய திடடக்கமிஷன் துணைத்தலைவர் மான்டெக் சிங் அலுவாலியா நேற்று பிரதமர் மன்மோகன் சிங்கை திடீரென அடுத்தடுத்து 2 முறை சந்தித்து பேசினார். மேலும் சோனியாகாந்தியையும் அவர் சந்தித்தார். இச்சந்திப்புகளின் போது என்ன பேசப்பட்டது? என்பது பற்றி அரசு தரப்பில் எந்தக் கருத்தும் வெளியாகவில்லை.



Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code