| காங்கிரஸ் கூட்டணியில் முலாயம்சிங்? |
| Monday, 30 June 2008 | ||||
புதுடெல்லி ஜுன் 30:ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு ஆதரவு அளிப்பது குறித்து ஜுலை 3ம் தேதி நடைபெறும் ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று சமாஜ்வாடிக் கட்சித் லைவர் முலாயம்சிங் யாதவ் கூறியுள்ளார். அணுசக்தி ஒப்பந்தத்தை முடிவுசெய்தால் ஆதரவுவாபஸ் என பிரகாஷ் காரத் நேற்று அறிவித்த அறிவிப்பால் தற்போது மத்தியஅரசுக்கு பெரும் நெருக்கடி உள்ள நிலையில் காங்கிரஸ் தலைமையிலான அரசு கவிழாமல் காப்பாற்ற தற்போதைக்கு சமாஜ்வாடிக் கட்சியை மட்டுமே நம்பியுள்ளது மத்தியஅரசு. கூட்டணி குறித்து சோனியா சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவை இரு முறை சந்தித்து பேசியதாக தெரிகிறது. பின் செய்தியாளர்களிடையே பேசுகையில் காங்கிரசுடன் எங்களுக்கு கொள்கை ரீதியாகவும் சிந்தனை ரீதியாகவும் பல முரண்பாடுகள் உள்ளன. இருப்பினும் மக்கள் உணர்வுகளுக்கு நாங்கள் மதிப்பளிப்போம். அதற்கேற்ப செயல்படுவோம். ஜுலை 3ம் தேதி ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெறவுள்ளது. அப்போது இதுகுறித்து விவாதித்து முடிவெடுப்போம் என்றார்.
Write Comment |
||||
மற்றவை
- பிரதமருடன் புஷ் தொலைபேசியில் பேச்சு
- சோம்நாத் சபாநாயகராக நீடிக்க காங். ஆதரவு
- மன்மோகன் அரசு வெற்றி பெற்றது!
- இந்திய-அமெரிக்க ஒப்பந்தமில்லை: அத்வானி
- ஆதரவு-266 எதிர்ப்பு-265: ஜெயிப்பது யார்?
- நம்பிக்கை ஓட்டெடுப்பு: டெல்லியில் எம்.பி.க்கள்
- பா.ஜ.க.-காங். எம்.பிக்களுக்கு வலை
- எம்பிக்களுக்கு ரூ. 30 கோடி-மாயாவதி பேரம்?
- மன்மோகன் சிங்குடன் முகேஷ் சந்திப்பு
- நம்பிக்கை ஓட்டெடுப்பு:22ம் தேதி நடைபெறும்
பகுதி:: தேசியம்

புதுடெல்லி ஜுன் 30:


