அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
மும்பை: பலத்தமழை-போக்குவரத்து பாதிப்பு
Wednesday, 02 July 2008
 மும்பை ஜுலை 2:

மும்பையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சாலைகளில் இரண்டு அடி உயரத்திற்கு வெள்ளம் ஓடுகிறது. மழை காரணமாக ரெயில் மற்றும் விமான போக்குவரத்து ஸ்தம்பித்தது.

கடந்த இரண்டு நாட்களாக மும்பையில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது இதனால் அந்தேரி பாந்தரா சியொன் செம்பூர் கத்கோபூர் போன்ற பகுதிகளில் மட்டும் 200 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

மழை காரணமாக மும்பையில் குறைந்த அளவிலேயே ஊழியர்கள் பணிக்கு வந்தனர். பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மும்பை - பூனே நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் வாகன போக்குவரத்து நடைபெறவில்லை.

தண்டவாளங்களில் மழைநீர் தேங்கி கிடந்ததால் பல்வேறு ரெயில் சேவைகளை மத்திய ரெயில்வே ரத்து செய்தது. மும்பையை தொடர்ந்து புனே நகரிலும் மழையால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது.


Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code