அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
ஆதரவு வாபஸ்: இடதுசாரிகள் இன்று கடிதம்
Wednesday, 09 July 2008
 டெல்லி ஜுலை 9:

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு வழங்கி வரும் ஆதரவை திரும்பப் பெறுவது தொடர்பான கடிதத்தை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலிடம் இன்று இடதுசாரி தலைவர்கள் வழங்கவுள்ளனர்.

இடதுசாரிகள் கடந்த 4 வருடங்களாக நீடித்து வந்த இழுபறி நேற்று முடிவுக்கு வந்தது. இதில் மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெறுவதாக நேற்று இடதுசாரி தலைவர்கள் அறிவித்தனர். இதுதொடர்பான முறைப்படியான கடிதத்தை இன்று குடியரசுத்தலைவரை சந்தித்து வழங்கவுள்ளதாகவும் மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் அறிவித்தார்.

சமாஜ்வாடி உறுதி:

மத்திய அரசுக்கு அளித்துவந்த ஆதரவை இடதுசாரிகள் வாபஸ் பெற்ற நிலையில் சமாஜ்வாடி கட்சியின் 39 எம்.பி.க்கள் ஆதரவு மிகுநத முக்கியத்துவம் பெறுகிறது. அரசை ஆதரிக்கபோவதாக சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் பொதுச்செயலாளர் அமர்சிங் ஆகியோர் ஏற்கனவே அறிவித்துவிட்டனர்.

பிரதமர் மன்மோகன்சிங்:

மொத்தம் 545 இடங்களைக் கொண்டுள்ள பார்லிமென்ட்டில் ஐ.மு. கூட்டணியின் பலம் இதுவரை 295 ஆக இருந்தது இடதுசாரிகள் வாபஸ் பெற்றுள்ளதால் இந்த பலம் 234 ஆக குறைந்துள்ளது. தனி மெஜாரிட்டிக்கு 272 இடங்கள் தேவை என்ற நிலையில் சமாஜ்வாடி ஆதரவளித்தாலும் உதிரிக் கட்சிகளின் ஆதரவும் அரசுக்கு தேவைப்படுகிறது. அரசுக்கு ஆபத்து இல்லை. பார்லிமென்ட்டில் பெரும்பான்மையை உறுதி செய்வோம் என பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.



Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code