| 22ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு?! |
| Saturday, 12 July 2008 | ||||
டெல்லி: நம்பிக்கை வாக்கு கோருவதற்காக வரும் 21ம் தேதி மத்திய அரசு நாடாளுமன்றத்தைக் கூட்டும் எனத் தெரிகிறது. 22ம் தேதி நம்பிக்கை தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடக்கலாம்.லோக்சபாவில் நம்பிக்கை வாக்கு கோர தனது அரசு தயாராக இருப்பதாகவும், தனது அரசுக்கு போதிய ஆதரவு இருப்பதாகவும் ஜனாதிபதியிடம் பிரதமர் தெரிவித்தார். இதுகுறித்து குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில், எவ்வளவு விரைவில் முடியுமோ, அவ்வளவு விரைவில் லோக்சபாவில் நம்பிக்கை வாக்கு கோர ஆர்வமுடன் இருப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார். இந் நிலையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்துவதற்காக நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டம் ஜூலை 21ம் தேதி கூடும் என தெரிய வந்துள்ளது. 22ம் தேதி நம்பிக்கை ஓட்டெடுப்பு நடைபெறுகிறது. மேலும் இன்று காலை பிரதமரின் இல்லத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது. மாலையில் சோனியா காந்தியின் இல்லத்தில் காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம் நடைபெறுகிறது.
Write Comment |
||||
மற்றவை
- பிரதமருடன் புஷ் தொலைபேசியில் பேச்சு
- சோம்நாத் சபாநாயகராக நீடிக்க காங். ஆதரவு
- மன்மோகன் அரசு வெற்றி பெற்றது!
- இந்திய-அமெரிக்க ஒப்பந்தமில்லை: அத்வானி
- ஆதரவு-266 எதிர்ப்பு-265: ஜெயிப்பது யார்?
- நம்பிக்கை ஓட்டெடுப்பு: டெல்லியில் எம்.பி.க்கள்
- பா.ஜ.க.-காங். எம்.பிக்களுக்கு வலை
- எம்பிக்களுக்கு ரூ. 30 கோடி-மாயாவதி பேரம்?
- மன்மோகன் சிங்குடன் முகேஷ் சந்திப்பு
- நம்பிக்கை ஓட்டெடுப்பு:22ம் தேதி நடைபெறும்
பகுதி:: தேசியம்

டெல்லி: நம்பிக்கை வாக்கு கோருவதற்காக வரும் 21ம் தேதி மத்திய அரசு நாடாளுமன்றத்தைக் கூட்டும் எனத் தெரிகிறது. 22ம் தேதி நம்பிக்கை தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடக்கலாம்.


