அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
மன்மோகன் அரசு வெற்றி பெற்றது!
Wednesday, 23 July 2008

சென்னை ஜுலை 23:

 

தனது தலைமையிலான அமைச்சரவையின் மீது நம்பிக்கை கோரி மக்களவையில் பிரதமர் மன்மோகன் சிங் கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானம் வெற்றி பெற்றது!

நம்பிக்கைத் தீர்மானத்தின் மீது நேற்று காலை முதல் இன்று மாலை 7.20 மணி வரை நடந்த விவாதத்திற்கு பிரதமர் பதிலளிக்க எழுந்தபோது, பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கம் எழுப்பியதால், தான் தயாரித்து வைத்திருந்த அறிக்கையை அவையில் சமர்ப்பித்தார்.

இதன்பிறகு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

முதலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரன் மூலம் வாக்களிக்கப்பட்டது. 487 உறுப்பினர்கள் வாக்களித்தனர். அதில் அரசிற்கு ஆதரவாக 253 உறுப்பினர்களம், எதிராக 232 உறுப்பினர்களும் வாக்களித்திருந்தனர். 2 உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

அதன்பிறகு வாக்குச் சீட்டில் வாக்களித்த உறுப்பினர்களின் வாக்குகள் எண்ணப்பட்டன. இறுதி முடிவை மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி அறிவித்தார்.

நம்பிக்கை தீர்மானத்திற்கு (அரசிற்கு) ஆதரவாக 275 வாக்குகளும், எதிராக 256 வாக்குகளும் பதிவானதாக கூறிவிட்டு, அரசின் மீதான நம்பிக்கை தீர்மானம் வெற்றி பெற்றதாக அறிவித்தார். 10 உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

அதனைத் தொடர்ந்து வந்தே மாதரம் இசைக்கப்பட்டு அவை நடவடிக்கை முடிக்கப்பட்டது. 




Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code