| மெரினா அழகுபடுத்தும்பணி: ரூ. 24 கோடி |
| Wednesday, 02 July 2008 | ||||
சென்னை ஜுலை 2:ரூ. 24 கோடி செலவில் மெரினா கடற்கரையை அழகுப்படுத்தும் பணி வரும் ஜனவரி மாதத்திற்குள் முடிவடையும் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையை சிங்கார சென்னையாக உருவாக்க தலைமைச் செயலகம் முதல் போர் நினைவுச் சின்னம் வரை ஒரு பகுதியாகவும் அங்கிருந்து கலங்கரை விளக்கம் வரை மற்றொரு பகுதியாகவும் அங்கிருந்து எலியட்ஸ் கடற்கரை வரை வேறொரு பகுதியாகவும் பிரிக்கப்பட்டு அழகுபடுத்தும் பணிகள் நடக்கிறது. மெரினாவுக்கு வரும் அனைவருக்கும் இயற்கை எழிலைக் கண்டு மகிழ நடைபாதையில் துருப்பிடிக்காத ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கைப்பிடிகள் நடைபாதைகளில் பளிங்கு கற்கள் பதிப்பது கொரியன் வகை புல்வெளிகள் அமைப்பது அலங்கார நீருற்றுகள் அமைப்பது சிற்ப மாடங்கள் பொதுத் தொலைபேசியகங்கள் பேருந்து நிழற்குடை உணவு வளாகம் மலர்ச்செடிகள் நடுவது நவீன கழிப்பிடங்கள் கட்டுவது சிறுவர்களுக்கான விளையாட்டு திடல்களை அமைப்பது போன்ற பணிகள் நடக்கிறது. இந்த பணிகளை உள்ளாட்சிதுறை அமைச்சர் ஸ்டாலின் அதிகாரிகளுடன் மெரினாவில் நேற்று ஆய்வு செய்தார்.
Write Comment |
||||
மற்றவை
- 32,000 கோடியில் 2 மெகா மின் திட்டங்கள்
- அ.ஒ.: ம. பிரதிநிதிகள் ஒப்புதல்: தங்கபாலு!
- கருணாநிதி டெல்லி பயணம்!
- நலிந்த கலைஞர்களுக்கு நிதி: கருணாநிதி!
- இன்று முதல் தமிழகத்தில் மின்வெட்டு!
- நாளை திமுக மாபெரும் உண்ணாவிரதம்
- சினிமாவுக்கு நான் எதிரியல்ல: ராமதாஸ்!
- பாமக எம்.எல்.ஏக்கள் டெல்லி பயணம்
- அரசு கேபிள் டி.வி. இன்று தொடக்கம்!
- தமிழக மீனவர்கள் பலி: த.அ.ஆலோசனை
பகுதி:: தமிழகம்

சென்னை ஜுலை 2:


