| மருத்துவபடிப்பு:கவின்சிலிங் தொடங்கியது |
| Friday, 04 July 2008 | ||||
சென்னை ஜுலை 4:மருத்துவ படிப்புக்கான முதல்கட்ட கவுன்சிலிங் நேற்று தொடங்கியது. ரேங்க் பட்டியலில் முதல் 9 இடங்களைப் பிடித்த மாணவ-மாணவிகள் அனைவரும் சென்னை மருத்துவ கல்லூரியையே தேர்வு செய்தார்கள். அரசு மருத்துவகல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ். படிப்புகளிலும் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேரவும் 12 ஆயிரத்து 227 பேர் விண்ணப்பித்தனர். ரேங்க் பட்டியல் கடந்த 27ந் தேதி வெளியிடப்பட்டது. முதல்கட்ட கவுன்சிலிங் ஜுலை 4ந் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே ரேங்க் பட்டியலில் முதல் 9 இடங்களைப் பிடித்த மாணவ - மாணவிகளுக்கு சென்னை கீழ்ப்பாகத்தில் உள்ள மருத்தவக் கல்வி இயக்குனர் அலுவலகத்தில் சிறப்பு கவுன்சிலிங் நடந்தது. அந்த 9 பேரும் சென்னை மருத்துவ்க கல்லூரியை தேர்வு செய்தார்கள். மருத்துவப் படிப்புக்கான கவுன்சிலிங் 8ந் தேதி வரை நடைபெறுகிறது. முதல்கட்ட கவுன்சிலிங்கில் இடம் கிடைத்துள்ள மாணவ மாணவிகள் வருகிற 10ந் தேதிக்குள் தேர்வு செய்த கல்லூரியில் உரிய கட்டணத்தை செலுத்தவேண்டும்.
Write Comment |
||||
மற்றவை
- 32,000 கோடியில் 2 மெகா மின் திட்டங்கள்
- அ.ஒ.: ம. பிரதிநிதிகள் ஒப்புதல்: தங்கபாலு!
- கருணாநிதி டெல்லி பயணம்!
- நலிந்த கலைஞர்களுக்கு நிதி: கருணாநிதி!
- இன்று முதல் தமிழகத்தில் மின்வெட்டு!
- நாளை திமுக மாபெரும் உண்ணாவிரதம்
- சினிமாவுக்கு நான் எதிரியல்ல: ராமதாஸ்!
- பாமக எம்.எல்.ஏக்கள் டெல்லி பயணம்
- அரசு கேபிள் டி.வி. இன்று தொடக்கம்!
- தமிழக மீனவர்கள் பலி: த.அ.ஆலோசனை
பகுதி:: தமிழகம்

சென்னை ஜுலை 4:


