அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
நள்ளிரவில் காடுவெட்டி குரு கைது
Saturday, 05 July 2008
 பா.ம.க. வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். அவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழங்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை நள்ளிரவில் பெரம்பலூர் மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர் தலைமையில் சென்ற 200 போலீசார் கொண்ட படையினர் அவரை கைது செய்தனர்.

முன்னாள் எம்.எல்.ஏவான குரு கடந்த சில மாதங்களாக திமுக தலைவர்களை மிகக் கடுமையாக தாக்கி வந்தார். முதல்வர் கருணாநிதி மற்றும் மூத்த அமைச்சர் ஆற்காடு வீராசாமி உள்ளிட்ட தலைவர்களை பகிரங்கமாகத் தாக்கினார். மேலும் மத்திய அமைச்சர் ராஜாவை கடுமையாக விமர்சித்து பேசினார். மேலும் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் மற்றும் காவல்துறை ஆணையரையும் கடுஐமயாகத் தாக்கி பேசினார்.

இதையடுத்து குருவின் பேச்சை காரணம்காட்டி பாமகவை கூட்டணியில் இருந்து நீக்கியதாக தெரிகிறது.

மேலும் காடுவெடடி குரு கைது செய்யப்படகூடும் என பேச்சு எழுந்தது. ஆனால் அப்படி எந்த திட்டமும் இல்லை என காவல்துறை டி.ஜி.பியே கடந்த ஜுன் 23ம் தேதி தான் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் அதிமுக பிரமுகரை மிரட்டியதாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் கைது செய்யப்பட்டதாக தெரிகிறது. மேலும் அப்பகுதியை சேர்ந்த பாமகவின் முக்கிய தலைவர்களும் கைதுசெய்யப்பட்டனர்.



Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code