அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
பணிந்து விடமாட்டோம்: ராமதாஸ்
Friday, 11 July 2008
 சென்னை ஜுலை 11:

அரசின் குறைகளை தைரியமாக சுட்டிக் காட்டி விமர்சித்து வரும் பா.ம.க.வை அரசியல் ரீதியாக சந்திக்க வழியின்றி அதை எப்படியாவது அழித்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு இந்த நடவடிககையை மேற்கொண்டிருக்கிறது. இதை கண்டு பணிந்துவிட மாட்டோம் மண்டியிடவும் மாட்டோம் என பா.ம.க. நிறுவனம் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டள்ள அறிக்கையில் வன்னியர் சங்க மாநிலத் தலைவர் குரு இந்திய தண்டனைச் சட்ட சாதாரணமான பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டார். இதுவே பழிவாங்கும் நடவடிக்கை என்று கூறப்படும் நிலையில் அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்திருப்பதாக அரசு அறிவித்திருக்கிறது.

குருவை விசாரணையின்றி சிறையில் அடைத்து வைக்க வேண்டும் என்பதற்காக அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தை அரசு ஏவி விட்டிருக்கிறது.

ஜனவரி மாதம் வன்முறையை தூண்டும் வகையில் குரு பேசினார் என குரு மீது குற்றம் சுமத்தப்பட்டது. அதற்காக இதைவிட கடுமையாக குளித்தலையில் பொதுக்கூட்டத்தில் வன்முறையை தூண்டும் வகையில் பேசியிருக்கும் அமைச்சர் கட்சிக்காரர்கள் மீது அந்த சட்டம் எப்போது பாயும்?

அரசின் குறைகளை தைரியமாக சுட்டிக் காட்டி விமர்சித்து வரும் பாமகவை அரசியல் ரீதியாக சந்திக்க வழியின்றி இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதைகண்டு பணிந்துவிட மாட்டோம் என ராமதாஸ் கூறினார்.


Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code