அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
தமிழக மீனவர்கள் பலி: த.அ.ஆலோசனை
Monday, 14 July 2008

 சென்னை ஜுலை 14:

 

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கொன்று குவிப்பதைத் தடுத்து நிறுத்துவது குறித்து ஆலோசிப்பதற்காக தி.மு.க. செயல் திட்டக் குழுவின் அவசரக் கூட்டம் சென்னை வரும் 17-ஆம் தேதி நடைபெறுகிறது.

கடலில் வரையறுக்கப்பட்ட எல்லைக் கோட்டைத் தாண்டி மீன் பிடித்தார்கள் என்று சாக்கிட்டு, தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படையினர் சுட்டுக் கொல்லும் கொடுமை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதை உடனடியாக நிறுத்தவும், இந்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழகத்தில் எத்தகைய கண்டனத்தை தெரிவிப்பது என்பதை அறிவித்து, அதனை நடைமுறைப்படுத்துவதற்காக வரும் 17-ஆம் தேதி மாலை 5 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக் குழுவின் அவசரக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இவ்வாறு அன்பழகன் அறிக்கையில் கூறியுள்ளார்.




Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code