அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
நெஞ்சு சளியா...?
Monday, 25 February 2008
 பனிக்காலம் கொஞ்சம் கொஞ்சமாக முடிந்து கோடை காலம் ஆரம்பித்துக் கொண்டிருக்கிறது.  இந்த பருவநிலை மாற்றத்தால், நமது உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும். இந்த நேரத்தில் உடல் நலத்தில் அதிக கவனம் கொள்ள வேண்டும். குறிப்பாக சளி, இருமல், ஜலதோஷம் போன்ற வியாதிகள் ஏற்படும்.

இதில் குறிப்பிட வேண்டியது மார்புச் சளி. சளி கொஞ்சம் கொஞ்சமாக மார்பில் படிந்து, இறுதியில் ஆபத்தான நிலைமைக்கு கொண்டு சென்று விடும். எனவே நெஞ்சு சளியை சரிசெய்ய தேவையான முயற்சிகளை நாம் மேற்கொள்ள வேண்டும். இதற்கு சித்த மருத்துவத்திலேயே எளிய வழிமுறைகள் உள்ளன.

நன்கு சுத்தமான தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து, பின்னர் ஆற வைத்து நெஞ்சில் தடவி வந்தால்  சளித் தொல்லை இல்லாமல் போகும்.

ஏலப் பொடியை நெய்யில் கலந்து காலை மாலை என இருவேளை வெறும் வயிற்றில் தினமும் சாப்பிட்டு வர ஓரிரு வாரத்தில் மார்புச் சளி இருந்த இடம் தெரியாமல் காணாமல் போகும்.


Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code