அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
3 நாடுகள் கிரிக்கெட் நாளை தொடக்கம்
Saturday, 07 June 2008
 இந்தியா வங்காளதேசம் பாகிஸ்தான் ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் நாளை தொடங்குகிறது. 14ம் தேதி வரை இந்தபோட்டி நடக்கிறது.

இப்போட்டியில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெறும்.

முதல்கட்டமாக நாளைய தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் - வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.

போதை மருந்து விவகாரத்தில் சிக்கிய முகமது ஆசிப் மற்றும் சோயி அக்தர் இப்போட்டியில் ஆடவில்லை. இதன்காரணமாக சோகைல் தன்வீர் உமர்குல் ஆகியோரே பாகிஸ்தான் பந்துவீச்சில் எதிர்பார்த்துள்ளது.

இந்தியா பாகிஸ்தான் தொடக்க ஆட்டம் பாகிஸ்தானில் 10ந் தேதி நடக்கிறது.


Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code