அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
இந்தியா-பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை
Monday, 09 June 2008
 இந்தியா வங்காளதேசம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய 3 நாடுகளிடையே கிரிக்கெட் போட்டி வங்காள தேசத்தில் தொடங்கியது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதவேண்டும். புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

இன்று நடைபெறும் 2வது லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

ஐபிஎல் 20 ஓவர் போட்டிக்கு பிறகு இந்தியா பங்கேற்கும் முதல் ஆட்டம் என்பதால் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. மேலும் ஐபிஎல் போட்டியில் ஷேவாக் காம்பீர் கேப்டன் டோனி சுரேஷ் ரெய்னா யூசுப்பதான் ரோகித்சர்மா ஆகியோரது ஆட்டம் முத்திரை பதிப்பதாக இருந்தது. இந்த ஆட்டம் ஷேவாக்கும் காம்பீரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுவாக இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் விளையாட்டுப்போட்டி விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code