அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
இந்தியா அதிரடி ஆட்டம்
Wednesday, 11 June 2008
 வங்காளதேசத்தில் நடைபெற்று வரும் 3 நாடுகள் கிரிக்கெட் போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி 140 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

டாசில் வென்ற இந்தியா முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர்களாக கம்பீர் சேவாக் களமிறங்கினர். தொடக்கம் முதலே அதிரடியில் இறங்கிய இருவரும் பாகிஸ்தான் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். இந்த ஜோடி 13.5 ஓவரில் 100 ரன் சேர்த்து இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். அபாரமாக விளையாடிய இருவரும் அடுத்தடுத்து அரைசதம் கடந்தனர்.

கம்பீர் 62 ரன் எடுத்து வகாப் பந்தில் அக்மல் வசம் பிடிபட்டார். சேவாக் - கம்பீர் 155 ரன் சேர்த்தது. அடுத்து சேவாக் 89 ரன்களும் எடுத்தனர்.

முடிவில் இந்திய அணி 42.5 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 271 ரன் எடுத்த நிலையில் மழை பெய்ததால் ஆட்டம் சிறிது நேரம் தடைப்பட்டது.

இந்தியா 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 330 ரன் குவித்தது.

அடுத்து விளையாடிய பாகிஸ்தான் 35.4 ஓவரில் 190 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி படுதோல்வி அடைந்தது.



Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code