அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
இறுதி போட்டியில் இந்தியா நுழையுமா?
Thursday, 03 July 2008
 ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியா பாகிஸ்தான் இலங்கை வங்காளதேசம் அகிய 4 நாடுகள் தகுதி பெற்றன. நேற்று நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தில் பாகிஸ்தான் 8 விக்கெட் இழப்பு 309 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

இதனிடையே இன்று நடைபெறவுள்ள 5 வது ஆடடத்தில் இந்தியா - இலங்கை அணிகள் மோதுகின்றன. இந்திய அணிக்கு இது வாழ்வா சாவா போராட்டம் ஆகும். வெற்றி பெற்றால் தான் இறுதி போட்டிக்கு தகுதி பெற முடியும். தோல்வி அடைந்தால் பாகிஸ்தான் - வங்காளதேசம் மோதும் ஆட்ட முடிவுக்காக காத்திருக்க வேண்டும். இதில் பாகிஸ்தான் தோற்றாம் இந்தியாவுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

இன்றைய போட்டியில் இலங்கையை தோற்கடித்து விட்டால் இந்தியாவுக்கு இறுதிப்போட்டிக்கு எளிதாக முன்னேற வாய்ப்புள்ளது. இரு அணிகளும் கடைசியாக மோதிய 5 ஆட்டங்களில் இந்தியா இலங்கை தலா 2 போட்டியில் வெற்றி பெற்றன. மாலை 3.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.






Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code