அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
விம்பிள்டன் டென்னிஸ்: நடால் சாம்பியன்
Monday, 07 July 2008
 கிராட் சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டன் நகரில் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது.

இதில் ரோஜர் பெடரர் மற்றும் ரபெல் நடால் மோதினார்கள். மழையால் ஆட்டம் அவ்வப்போது பாதிக்கப்பட்டது. முதல் செட்டை நடால் 6-4 என்ற கணக்கில் எளிதில் வென்றார். அதே உத்வேகத்துடன் விளையாடி அவர் 2வது செட்டையும் 6-4 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

3வது செட்டில் பெடரர் ஆக்ரோஷமாக விளையாடினார். நடாலும் ஈடுகொடுத்து விளையாடினார். இதனால் ஆட்டம் விறுவிறுப்பாக இருந்தது. 6-6 என்ற சமநிலை ஏற்பட்டது. இதனால் டை பிரேக்கர் கடைபிடிக்கப்பட்டது. இதில் 7-5 என்ற கணக்கில் பெடரர் வென்றார். மற்றும் 4வது செட்டில் 6-6 என்ற சமநிலை ஏற்பட்டு டைபிரேக்கர் கடைபிடிக்கப்பட்டது. இதில் பெடரர் 10-8 என்ற கணக்கில் வென்றார்.

இருவரும் தலா 2 செட்களை கைப்பற்றி இருந்ததால் சாம்பியன் பட்டத்தை நிர்ணயிக்கும் கடைசி செட்டில் பரபரப்பு ஏற்பட்டது. கடைசி செட்டில் நடால் 9-7 என்ற கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் பெற்றார்.



Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code