அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
தியாகராஜர் ஆராதனை துவக்கம்
Wednesday, 23 January 2008
 திருவையாறு:  தியாகராஜரின் 161வது ஆராதனை விழா திருவையாறில் இன்று துவங்குகிறது.

தஞ்சை மாவட்டம், திருவையாறில் ஆண்டுதோறும் உலகப்பிரசித்தி பெற்ற தியாகராஜர் ஆராதனை விழா நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா உட்பட இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கர்நாடக இசைக் கலைஞர்கள், பாடகர்கள் கலந்து கொண்டு தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்துவது வழக்கம்.
 
இந்த ஆண்டிற்கான ஆராதனை விழா, இன்று மாலை 5 மணிக்கு இஞ்சுக்குடு கணேசன், ராமதாஸ் நாதஸ்வரம், ராதா கிருஷ்ணன் ஆகியோரின் தவில் மங்கல இசையுடன் ஆரம்பமாகிறது.

தியாக பிரம்ம மகோத்சவ சபா தலைவர் ஜி.ஆர். மூப்பனார் இந்த விழாவுக்கு தலைமை வகிக்கிறார். சட்டீஸ்கர் மாநில ஆளுனர் நரசிம்மன் விழாவை துவக்கி வைக்கிறார்.

இந்த விழாவில் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், தஞ்சை மாவட்ட கலெக்டர் விஜயராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கின்றனர். இவ்விழா வரும் 27ம் தேதி வரை ஐந்து நாட்கள் நடைபெறும்.

விழா துவங்குவதற்கு முன்பாக திருவையாறில் உள்ள தியாகராஜரின் இல்லத்தில் இருந்து அவரது உருவப்படங்களுடன் ஊர்வலம் புறப்பட்டு, காவிரி ஆற்றின் வடக்குக் கரையோரம் அமைந்துள்ள தியாகராஜர் சமாதியில் சிறப்புப் பூஜைகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 


Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code