| வாஸ்து சாஸ்திரம் தெரியுமா...? |
| Thursday, 06 December 2007 | ||||
வாஸ்து சாஸ்திரம் என்பது நகர அமைப்பு கட்டிடக்கலை என்பன தொடர்பான இந்தியாவின் மிகவும் பழமையான அறிவுத்துறைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.வாஸ்து என்றசொல் கட்டிடமொன்று கட்டப்பட்டுள்ள அல்லது கட்டப்படவுள்ள நிலத்தைக் குறிக்கிறது. வாஸ்து சாஸ்திரம் என்பது ஒரு நிலத்தில் கட்டிடம் கட்டுவதற்குரிய முறைகளையும் அதன் தத்துவங்களையும் விளக்கும் ஒரு வேதம் சார்ந்த அறிவுத்துறையாகும். இதன் தொடக்கம் கி.மு 3000 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்டிருக்கக்கூடுமெனக் கருதப்படுகிறது. இந்துக்களின் முதல் நூல்களான நான்கு வேதங்களில் நான்காவது வேதமான அதர்வ வேதத்தில் இது பற்றிச் சொல்லப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. வாஸ்து சாஸ்திரத்தின் பல்வேறு அம்சங்களையும் விரிவாக விளக்கிப் பல நூல்கள் பழைய காலத்திலேயே எழுதப்பட்டுள்ளன. வாஸ்து சாஸ்திரத்தின் நோக்கம் மக்களுடைய நல்வாழ்வுக்காக அவர்களுடைய தேவைகளையும் எதிர்பார்ப்புக்களையும் புர்த்தி செய்வதுடன் கட்டப்படுகின்ற கட்டிடம் மனிதன் இயற்கையுடனும் இப் பிரபஞ்சத்தின் ஒழுங்குடனும் இசைந்து போவதற்கு உதவுவது வாஸ்து சாஸ்திரம்.
Write Comment |
||||

வாஸ்து சாஸ்திரம் என்பது நகர அமைப்பு கட்டிடக்கலை என்பன தொடர்பான இந்தியாவின் மிகவும் பழமையான அறிவுத்துறைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.


